Tuesday, October 29, 2013

மீண்டும் வலையுலகத்திற்கு

நண்பர் Muralitharan Mauran இன் வழிகாட்டலில் ஆலோசனையில் மீண்டும் வலையுலகிற்கு பிரவேசிக்கலாம் என்றிருக்கிறேன். காரணங்கள் அவர் ஏற்கெனவே எழுதியிருப்பதுதான்

//சமூக வலையமைப்புக்களில் எனக்கிருந்த பெரும் மனக்குறையத் தீர்ப்பதற்காகத்தான் இந்த வலைப்பதிவு.

அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை, செய்திகள் மீதான துரித எதிர்வினைகளை, நண்பர்களின் கருத்துக்களுக்கான உடனடிப் பதிலை சமூக வலையமைப்புக்களில் எழுதுகிறேன்.

அவை  வேண்டிய நேரங்களில் மறுபடி படிக்கக்கூடியவண்ணம் ஒழுங்காகச் சேமிக்கப்படுவதில்லை. ஆழ்கிணற்றில் போட்ட கல்லுப்போலப் போய்விடுகிறது.

அவற்றை பொதுவெளியில் ஒழுங்காகப் பதிவு செய்யவே இந்த வலைப்பதிவு. இதிலுள்ள கருத்துக்கள் உரிய முறையில் மனதினுள் ஒழுங்குபடுத்தப்பட்டு மேலதிக ஆய்வுகளினூடாகக் கட்டுரையாக/வலைப்பதிவாக எழுத்தப்படுவனவல்ல.

இவை அவ்வப்போது மனதில் தோன்றும் சிறு சிறு பொறிகளின் ஒழுங்குபடுத்தப்படாத பதிவுகள். முழுமையானவை அல்ல.

இங்குள்ள அனைத்தும் வெறும் எண்ணப்பொறிகளே.//